ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்
ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் இருந்தது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கிறது என கூறி வந்த மத்திய அரசு, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் சட்டதிருத்ததை கொண்டு வந்து அதனை அரசிதழில் வெளியிட்டது.
அதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாய பொதுத்தேர்வு நடத்தப்படும். இதில் தோல்வியுறும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு மாதங்களில் மீண்டும் வாய்ப்பளிக்கப்படும். அதிலும் தோல்வியுற்றால் அதே வகுப்பிலேயே அவர்கள் தொடர வேண்டும்.